ஏர்டெல் ரூ.509 பிளான்
ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள ரூ.459 பிளானுக்கு எதிராக ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு ரூ.509 கட்டணத்தில் டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஏர்டெல் வெளியிட்ட அறிவிப்பின்படி அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளதால், ஏர்டெல் ப்ரீபெய்டு பயனாளர்கள் ரூ.509 கட்டணத்தில் நாள் தோறும் 1ஜிபி உயர் வேக டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் ரோமிங் உட்பட, தினசரி 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை மொத்தம் 84 நாட்கள் கால அளவுடன் வழங்குகின்றது.
வரம்பற்ற அழைப்புகள் என்ற பெயரில் ஏர்டெல் வழங்கி வந்த வாரம் 1200 நிமிடங்கள் கட்டுப்பாடு தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டங்களை தவிர மற்ற வட்டங்களில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.