தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தும் வகையில் பொது தொலை தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் ரூ.444 கட்டணத்தில் தினமும் 4ஜிபி டேட்டாவை வழங்குகின்றது.
பிஎஸ்என்எல் சோக்கா
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பொது தொலை தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் ட்ரிபிள் ஏஸ் என்ற திட்டத்தை அறவித்து மூன்று மாதங்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா வழங்கிய நிலையில் தற்போது புதிதாக பிஎஸ்என்எல் சோக்கா என்ற பிளானை அறிவித்துள்ளது.
STV- 444 BSNL CHAUKKA பிளானில் வாடிக்கையாளர்கள் தினமும் 4ஜிபி டேட்டாவை 90 நாட்களுக்கு அதாவது 360 ஜிபி 3ஜி டேட்டாவை ரூ.444 கட்டணத்தில் பெறலாம்.
எந்தவொரு தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும் இது போன்ற சலுகைகளை அறிவிக்காத நிலையில் நாட்டின் பொது தொலை தொடர்பு நிறுவனம் அறிவித்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான தனியார் மற்றும் பிஎஸ்என்எல் போன்றவை ஜியோ வழங்கிய 7 மாதங்களுக்கு மேலான இலவச சேவையில் கடுமையான நிதி சிக்கலுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் பிஎஸ்என்எல் அதிரடியை தொடங்கியுள்ளது.