முகேசு அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னர் தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் ஆர்காம் – ஏர்செல் இணைப்பை செயற்படுத்த தொடங்கியிருந்த திட்டத்தை கைவிடுதவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்காம் – ஏர்செல்
கடந்த ஆண்டு இந்திய தொலைத்தொடர்புத் துறையில் கால் பதித்த முகேஷ் அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கி சலுகைகளின் காரணமாக ஏர்டெல் நிறுவனம் டெலினார் நிறுவனத்தையும், வோடபோன்-ஐடியா இணைப்பு மற்றும் ஏர்செல்- ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இணைப்பு ஆகிய திட்டங்களை நிறுவனங்கள் தேற்கொண்டிருந்த நிலையில் ஆர்காம் – ஏர்செல் இணைப்பை தவிர மற்ற நிறவனங்களின் இணைப்பு ஏறக்குறைய செயற்பாட்டுக்கு வரத்தொடங்கியுள்ளது.
ஆர்காம் என, அழைக்கப்படுகின்ற, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், அனில் அம்பானிதலை 46 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி உள்ளது. இதை, ஏர்செல் நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கவும், ஜியோ-வின் பாதிப்பு மற்றும் கடன் அளவை குறைக்க ஆர்காம் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், ஆர்காம் மற்றும் ஏர்செல் நிறுவனங்களின் இணைப்பிற்கு, ஆர்காம் டெலிகாம் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், கடனை அடைக்க வேறு வழியைக் கையாள முடிவு செய்துள்ளது.
எனவே,இரு நிறுவனங்களும் பல்வேறு சட்டம் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள், அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாலும், பல தரப்பினர், உள்நோக்கத்துடன் தலையிட்டு உள்ளதாலும், நிறுவனங்களின் பரஸ்பர ஒப்புதலுடன், இணைப்பு திட்டத்தை கைவிட்டு உள்ளதாக, ஆர்காம் தெரிவித்துள்ளது.