ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான அனில் திருபாய் அம்பானி அவர்களின் 85 வது பிறந்த நாளில் வெளியான அறிவிப்பு தொலைத்தொடர்பு துறையில் மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. அனில் அம்பானியின் தலைமையின் கீழ் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சொத்துக்களை 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கையகப்படுத்துவதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ஆர்காம் டெலிகாம்
இந்தியாவின் மிக வேகமான வளர்ந்து வரும் 4ஜி நெட்வொர்க்கான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முகேஷ் அம்பானி கட்டுபாட்டில் இயங்கி வருகின்றது. இவருடைய தம்பி அனில் அம்பானி கீழ் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ.45,000 கோடி நஷ்டத்தை அடைந்துள்ளதை தொடர்ந்து மிகுந்த சிக்கலை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பு தொலைத் தொடர்பு துறையில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின், 122.4 மெகாஹெர்ட்ஸ், ‘4ஜி’ அகண்ட அலைவரிசை, 43,000 தொலைதொடர்பு கோபுரங்கள், 1.78 லட்சம் கிமீ கண்ணாடி நாரிழை கம்பிவட ஒருங்கிணைப்பு வசதி, 248 ஊடக சேவை ஒருங்கிணைப்பு முனையங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் ஆகியவை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வசம் கைமாற உள்ளது.
திவால் நடவடிக்கையை தடுக்கும் நோக்கில் முகேஷ் அம்பானியின் இந்த நடவடிக்கை டெலிகாம் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என சி.ஓ.ஏ.ஐ., டைரக்டர் தெரிவித்துள்ளார்.